கோலாலம்பூர், செப்டம்பர் 08-
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவீன உயர்விற்கான தீர்வுகளுக்கு அதீத கவனம் செலுத்துவதாக இருக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று கோடி காட்டினார் .
2025 பட்ஜெட் , பணவீக்கத்தை நிலைப்படுத்தவும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனத்தை நிவர்த்தி செய்யவும் அவசியமான யுக்திகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார் .
இன்று போர்ட்டிக்சனில் மக்கள் நல்வாழ்வுக்கான சுகாதாரத்திட்டத்தை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேதகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மடாணி அரசாங்கத்தின் கீழ் பணவீக்க விகிதம் 2 விழுக்காடாக தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது . அதெவேளையில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இரண்டாவது காலாண்டில் 5.9 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார் .
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும் அக்டோபர் 18 ஆம் தேதி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.








