கின்ராராவில் உள்ள ஆயர் ஈத்தாம் காடு அருகிலுள்ள நிலம் சந்தை மதிப்புக்கு குறைவாக விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு அதற்கென ஒரு சொத்து ஆலோசகர் நியமிக்கப்பட்டு, அந்த நிலத்தின் மதிப்பு சதுர அடி ஒன்றுக்கு 13.02 ரிங்கிட் என்றும், மொத்தமாக 95.3 மில்லியன் ரிங்கிட் என்றும் மதிப்பிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது ஏல முறையில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், இறுதியில் அந்த நிலம் 101 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டதாகவும் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலையானது அதன் மதிப்பீட்டைவிட 5.9 விழுக்காடு அதிகம் என்று அமிருடின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








