May 1, 2026
Thisaigal NewsYouTube
கின்ராரா காடு அருகேயுள்ள நிலம் சந்தை மதிப்புக்குக் குறைவாக விற்கப்பட்டதா? - சிலாங்கூர் மந்திரி பெசார் மறுப்பு
தற்போதைய செய்திகள்

கின்ராரா காடு அருகேயுள்ள நிலம் சந்தை மதிப்புக்குக் குறைவாக விற்கப்பட்டதா? - சிலாங்கூர் மந்திரி பெசார் மறுப்பு

Share:

கின்ராராவில் உள்ள ஆயர் ஈத்தாம் காடு அருகிலுள்ள நிலம் சந்தை மதிப்புக்கு குறைவாக விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு அதற்கென ஒரு சொத்து ஆலோசகர் நியமிக்கப்பட்டு, அந்த நிலத்தின் மதிப்பு சதுர அடி ஒன்றுக்கு 13.02 ரிங்கிட் என்றும், மொத்தமாக 95.3 மில்லியன் ரிங்கிட் என்றும் மதிப்பிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது ஏல முறையில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், இறுதியில் அந்த நிலம் 101 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டதாகவும் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலையானது அதன் மதிப்பீட்டைவிட 5.9 விழுக்காடு அதிகம் என்று அமிருடின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி