கடந்த 1 டிசம்பர் முதல் இரண்டு ஆண்டு காலத் தவணைக்கு பகாங் மாநில பொருளாதார ஆலோசகர் மன்றம் அமைக்கப்பட்டது என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டிவான் இஸ்மாயில் தெரிவித்தார்.
அம்மன்றத்துக்குத் தலைவராக தான் ஶ்ரீ முஹமாட் நாசிர் துன் அப்துல் ரசாக் உம் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இருவர், மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் ஆகியோருடன் இன்னும் 5 உறுப்பினர்கள் ஆகியோர் இந்த உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
5 ஆண்டுக்கான பகாங் மாநில பொருளாதாரத் திட்டத்தை இந்த மன்றம் உருவாக்க உள்ளது.








