பினாங்கில் உள்ள ஒரு இடுகாட்டில் ஆடையின்றி அநாகரீகமாக நடந்து கொண்ட ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் வேளையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர்டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சுமார் 38 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு நபர் நிர்வாணமாக நிற்க, ஒரு பெண் கல்லறையின் மீது அமர்ந்து அநாகரீக செயலில் ஈடுபடுவது தெரிகிறது. இதைப் பார்த்த ஒரு பெண்மணி, அவர்களைக் கடுமையாகச் சத்தமிட்டு தட்டிக் கேட்டுள்ளார்.
"இது தொடர்பாக பொது இடங்களில் இடையூறு மற்றும் பாலியல் துன்புறுத்தல் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் இந்த சம்பவம் இப்போது நடந்துள்ளதா அல்லது அது பழைய வீடியோ என்பதும் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.
பக்தியும் அமைதியும் நிலவ வேண்டிய இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








