Jun 30, 2026
Thisaigal NewsYouTube
இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை
தற்போதைய செய்திகள்

இடுகாட்டில் எல்லை மீறிய ஜோடி: போலீஸ் அதிரடி விசாரணை

Share:

பினாங்கில் உள்ள ஒரு இடுகாட்டில் ஆடையின்றி அநாகரீகமாக நடந்து கொண்ட ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் வேளையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர்டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சுமார் 38 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு நபர் நிர்வாணமாக நிற்க, ஒரு பெண் கல்லறையின் மீது அமர்ந்து அநாகரீக செயலில் ஈடுபடுவது தெரிகிறது. இதைப் பார்த்த ஒரு பெண்மணி, அவர்களைக் கடுமையாகச் சத்தமிட்டு தட்டிக் கேட்டுள்ளார்.

"இது தொடர்பாக பொது இடங்களில் இடையூறு மற்றும் பாலியல் துன்புறுத்தல் சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் இந்த சம்பவம் இப்போது நடந்துள்ளதா அல்லது அது பழைய வீடியோ என்பதும் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

பக்தியும் அமைதியும் நிலவ வேண்டிய இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு