Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பாங்கியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த Steroids மையம் முறியடிப்பு!
தற்போதைய செய்திகள்

பாங்கியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த Steroids மையம் முறியடிப்பு!

Share:

பாங்கி, நவம்பர்.04-

பாங்கியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடு ஒன்றில், Anabolic steroids என்ற ஊக்க மருந்துகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த கும்பலைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூர் சுகாதாரத் துறை மற்றும் மருந்தக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை கிள்ளான் உட்பட 5 இடங்களில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில், சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பில், 500-க்கும் அதிகமான சட்டவிரோத மருந்துப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள், தசைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஊக்க மருந்துகளாகப் பயன்படுத்தப்படுபவை என்று சிலாங்கூர் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளில், தயாரிக்கப்பட்டுள்ள அம்மருந்துகள், சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது