Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ஆறுகள் மாசடை விவகாரம்; விசாரணையை தொடங்கியது லுவாஸ்
தற்போதைய செய்திகள்

ஆறுகள் மாசடை விவகாரம்; விசாரணையை தொடங்கியது லுவாஸ்

Share:

சிலாங்கூர், ஜூலை 24-

சிலாங்கூர், குவாங்-ங்கிள்ள நெகிழி சார்ந்த தொழிற்சாலையில் கொள்கலனில் ஏற்பட்ட கசிவினால், சுங்கை குண்டாங், சுங்கை செம்பா ஆகிய ஆறுகள் மாசடைந்ததோடு, நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டன.

அது தொடர்பில், விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் நீர் நிர்வகிப்பு வாரியம் - லுவாஸ் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மீது மேல்கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு ஏதுவாக, 1999ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் செஷன்ஸ் 79(1) பிரிவின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

அதேவேளையில், சுற்றுச்சூழல் துறையினரும் செலாயாங் நகராண்மைக் கழகத்தினரும் அவர்களது அதிகாரத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் லுவாஸ் கூறியுள்ளது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு