Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சையிட் சாடிக்கிற்கு எதிரான நம்பிக்கை மோசடி வழக்கில் நவம்பர் 9 இல் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

சையிட் சாடிக்கிற்கு எதிரான நம்பிக்கை மோசடி வழக்கில் நவம்பர் 9 இல் தீர்ப்பு

Share:

மூடா கட்சியின் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையிட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் க்கு எதிரான நம்பிக்கை மோசடி வழக்கில் நவம்பர் 9 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

நான்கு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர், விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான சையிட் சாதிக் 4 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்படுவாரா? அல்லது குற்றவாளி என்று தீர்ப்பளித்து சிறைத் தண்டனை விதிக்கப்படுவாரா ? என்பது குறித்து அன்றைய தினம் உயர்நீதிமன்றம் முடிவு செய்யவிருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி அசார் அப்துல் ஹமீத், காலை 9 மணிக்கு தமது தீர்ப்பை வழங்கவிருக்கிறார். சையிட் சாதிக் கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக கூறி, அவர் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அறிவித்து இருந்தது.

சையிட் சாதிக் கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளதாக நீதிபதி அசார் அப்துல் ஹமீத் தெரிவித்து இருந்தார்.

பெர்சத்து கட்சி இளைஞர் பிரிவின் முன்னாள் உதவி பொருளாளர் ரஃபிக் ஹகிம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்ட பத்து லட்சம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்வதில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக 30 வயதான சையிட் சாடிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி கே.எல். செண்ரல், மெனாரா சி.ஐ. எம். பி கட்டடத்தின் சி.ஐ.எம்.பி வங்கியில் சையிட் சாட்டிக் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்