சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோ பிரிவில் மலேசிய சுங்கத்துறை, 4 கோடியே 44 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சோம்பி வகையை சேர்ந்த 807.9 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 36 பெட்டிகளில் 72 அலுமியப் பாட்டில்களில் திரவத் தன்மையிலான அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறையின் துணை தலைமை இயக்குநர் சசாலி முஹமாட் தெரிவித்தார்.
மொர்ஃபின் வகையை சேர்ந்த போதைப்பொருளை விட 100 மடங்கு மிக அபாயரமானது, ஹெரோயினை விட 20 முதல் 40 மடங்கு வேகமானது என்று நம்பப்படும் இவ்வகையை சேர்ர்ந்த போதைப்பொருளை அரச மலேசிய சுங்கத்துறை கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று சசாலி முஹமாட் குறிப்பிட்டார்.








