அடுத்தவரின் மனைவியை வசீகரிக்கும் நபரை குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போதிலும் அதே குற்றத்தை ஷரியா சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும் என்று திரெங்கானு மாநில ஷரியா தலைமை நீதிபித வான் முஹமாட் சக்ரி வான் முஹமாட் தெரிவித்துள்ளார்.
இது போன்ற வக்கீர செயலை புரியும் நபரை 2001 ஆம் ஆண்டு திரெங்கானு ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கு நடப்பு சட்டத்தில் இடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








