ஷா ஆலம், செப்டம்பர் 03-
ஷா ஆலாம், செக்ஷன் 7 இல் உள்ள ஒரு ஏரி சூழ்ந்துள்ள பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த இடத்தை சுற்றியும் பாதுகாப்பு கயிறுகள் கட்டப்பட்டுள்ளன.
அந்த ராட்ஷச முதலையை பிடிப்பதற்கு பொறி வைக்கப்பட்டுள்ள அதேவேளையில் அப்பகுதியில் பொதுமக்கள் நெருங்கி விடாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஷா ஆலாம் மாநகர் மன்ற அமலாக்கத் தரப்பினர் அந்த இடத்தில் பாதுகாப்பு வளையைத்தை ஏற்படுத்தியுள்ளனர்.








