Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

Share:

ஹுலு சிலாங்கூர், அக்டோபர் 07-

தஞ்சோங் மாலிம், UPSI கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி நூர் ஃபரா கர்தினி அப்துல்லா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர் ஒருவர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு விசாரணையை கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தைச்சேர்ந்தவரான 26 வயது அலிஃப் மோஞ்சனி என்ற அந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட இந்த கொலை வழக்கில் சவப்பரிசோதனை அறிக்கை மற்றும் இரசாயன அறிக்கை போன்ற முக்கிய ஆவணங்களுக்காக தாங்கள் இன்னும் காத்திருப்பதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஐரீன் நபிலா அமானி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை வரும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

தனது காதலியான 25 வயது நூர் ஃபரா கர்தினி-யை கடந்த ஜுலை 10 அம் தேதி எஸ்கேசி கெலேடாங், முகிம் ஹுலு பெர்னாம், உலு சிலாங்வர் என்ற முகவரியில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் கொலை செய்ததாக அந்த போலீஸ்காரர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு