Aug 29, 2026
Thisaigal NewsYouTube
திபெத்தில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – 55 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை
தற்போதைய செய்திகள்

திபெத்தில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – 55 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை

Share:

திபெத்தின் டார்சென், பகுதியில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாகவும், நல்ல உடல்நலத்துடனும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைலாஷ் மலையின் தெற்கு அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய நகரமே டார்சென் ஆகும்.

இதனிடையே, நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, மேலும் 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

அவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தகவல்களைத் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News