வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திங்கட்கிழமை புத்ராஜெயா டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறவுள்ள 2026 தேசிய தின அணிவகுப்பு, வானிலை சாதகமாக இருந்தால் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் புகைமூட்டம் காரணமாக, சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் நேற்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
வானிலை நிலவரத்தைப் பொறுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மேக விதைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.
ஆஸ்துமா அல்லது சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ளவர்கள், சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அணிவகுப்பில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு 80,000-க்கும் அதிகமானோர் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அன்றைய தினம் வானிலை நிலைமை மோசமாக இருந்தால், நிகழ்ச்சி நிறுத்தப்படும் என்றும் ஃபஹ்மி தெளிவுபடுத்தினார்.








