Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சாமினியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சாமினியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது

Share:

காஜாங், அக்டோபர்.03-

நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள 16 வயது ஓர் இந்திய இளம் பெண் எஸ். சாமினியைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைப் போலீசார் நாடியுள்ளனர்.

செமினி, பண்டார் ரிஞ்சிங், செக்‌ஷன் 2 ஐ சேர்ந்த சாமினி, நேற்று மாலை 4 மணி முதல் காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.

140 சென்டிமீட்டர் உயரம், மெல்லிய உடல்வாகுவைக் கொண்டிருந்த அந்த இளம் பெண் ஆகக் கடைசியாக வெள்ளை நிற டி-சட்டையை அணிந்திருந்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமினியை நேரில் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை ஏசிபி நாஸ்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்