தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் முதலாளிகள் தரப்பில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வரும் சந்தா பங்களிப்புத் தொகையை அதிகரிக்கும் பரிந்தரை குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்புத்தொகையை உயர்த்தும் நோக்கத்தில் முதலாளிகள் கூடுதல் நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த பரிந்துரை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார். இந்த பரிந்துரை குறித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னதாக முதலாளிமார்கள் தரப்பிலும் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related News

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்


