May 18, 2026
Thisaigal NewsYouTube
பகடி வதைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது
தற்போதைய செய்திகள்

பகடி வதைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது

Share:

ஷா ஆலாம், ஜூலை.11-

பகடி வதைச் செய்பவர்களுக்கு எதிராகக் கடும் தண்டனையை விதிக்கும் 2025 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட குற்றவியல் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் உட்பட நவீன கட்டமைப்பில் அதிகரித்து வரும் பகடி வதைச் சம்பவங்களை நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப கையாளவும், குற்றம் இழைத்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கவும் நடப்பு குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்டவர் குற்றம் இழைத்துள்ளார் என்பது நீதிமன்றத்தினால் உறுதிச் செய்யப்படுமானால் அவருக்கு கூடியபட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க இன்று அமலுக்கு வந்துள்ள பகடி வதைச் சட்டம் வகை செய்கிறது என்று சட்டத் சீர்திருத்தம் மீதான பிரதமர் துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News