Mar 11, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

Share:

சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே விற்கு எதிராக லோரி ஓட்டுனர்கள் குவாந்தான்,இன்டெரா மாகோத்தா அருகில் உள்ள பஹாங் மாநில ஜேபிஜே தலைமை அலுவலகத்தின் முன் மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டு அந்த அரசாங்க ஏஜென்சிக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

நூற்றுக்கு மேற்பட்ட லோரி ஓட்டுனர்கள் சாலை ஓரமாக நின்றுகொண்டு தங்கள் விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.
அனுமதிக்கப்பட்ட எடைக்கு மீறிய சுமைகளை ஏற்றுதல் உட்பட பல்வேறு காரணங்களை முன் வைத்து பஹாங் மாநில ஜேபிஜே அமலாக்க அதிகாரிகள் தொடர்ச்சியாக தங்களுக்கு எதிராக சம்மன் வழங்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் தங்கள் மீது தொடுத்து வரும் நெருக்குதல் ஆகியவற்றை இனியும் தாங்கிக்கொள்வதற்கு சக்தி இல்லை என்று அந்த லோரி ஓட்டுனர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்லர் ஆனால் ஜேபிஜே வின் கண்மூடித்தனமான அடாவடித்தன நடவடிக்கை தங்களின் வாழ்வாதாரத்தை பெரியளவில் பாதிக்கச் செய்திவிட்டதாக அவர்கள் தங்களின் மனச்சுமையை கொட்டித் தீர்த்தனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு