Mar 31, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க நிதியை இனி பயன்படுத்தப் போவதில்லை
தற்போதைய செய்திகள்

அரசாங்க நிதியை இனி பயன்படுத்தப் போவதில்லை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.27-

தனியார் அல்லது தனிப்பட்ட சொத்துக்களில் விளையாட்டு வசதிகளைக் கட்டுவதற்கோ அல்லது மேம்படுத்துவதற்கோ அரசாங்க நிதியை இனி பயன்படுத்தப் போவதில்லை என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹான்னா ஓஓஏஆ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமில்லாத, குறிப்பாக புஃட்சால் மைதானங்களைப் பராமரிக்க பொது நிதியை பயன்படுத்துவதை நிறுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நில உரிமையாளர்கள் அல்லது குடியிருப்புப் பகுதிகளும் தங்கள் பகுதியில் புஃட்சால் அல்லது pickleball மைதானங்களைக் கட்ட கோரிக்கை வைத்தால் அது நியாயமற்றது. ஏனெனில், நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். விளையாட்டு வசதிகளை கட்ட விரும்பினால், அது கூட்டரசு அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் எளிதில் அணுக முடியும். தனியார் நிலத்தில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மாநில அரசு அல்லது ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டும் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

பராமரிப்பு செலவுகள் காரணமாக சில மாநிலங்கள் விளையாட்டு வசதிகளை ஏற்க மறுப்பது கவலை அளிக்கிறது. இளைஞர்களிடையே போதைப்பொருள், மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது குறித்தும் அமைச்சர் கவலை தெரிவித்தார். கடந்த இருபது ஆண்டுகளில் இளைஞர் மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News