Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் வங்கி கணக்கு முடக்கம்
தற்போதைய செய்திகள்

பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் வங்கி கணக்கு முடக்கம்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் முடக்கியுள்ளது.

பிரபல வர்த்தகர் டத்தோஸ்ரீ சிம் சூ தியாம் சம்பந்தப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டில் ஹம்சா ஜைனுதீன் பெயர் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மற்றும் அவரின் குடும்பம் சார்ந்த அனைவரின் வங்கி கணக்குகளையும் வருமான வரி வாரியம் அதிரடியாக முடக்கியுள்ளது.

Related News