May 28, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச ஆடவர் பலி, இதர நால்வர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

வங்காளதேச ஆடவர் பலி, இதர நால்வர் படுகாயம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.08-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 403 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூருக்கு அருகில் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் மூன்று வாகனங்கள் சம்பந்தபட்ட விபத்தில் வங்காளதேச ஆடவர் ஒருவர் பலியானார். இதர நால்வர் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இந்த விபத்து தொடர்பாக பிற்பகல் 1.27 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

ஒரு டிரெய்ல் லோரி, மூன்று டன் லோரி ஒன்று மற்றும் டொயோட்டா ரக கார் ஒன்று இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதில் யாரும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கவில்லை என்ற போதிலும் மூன்று டன் லோரியில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க வங்காளதேசப் பிரஜை ஒருவர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

51 வயது லோரி ஓட்டுநர் மற்றும் இதர மூவர் காயமுற்றதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்