May 18, 2026
Thisaigal NewsYouTube
கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை நிகழ்வுகள் அவசியம்
தற்போதைய செய்திகள்

கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை நிகழ்வுகள் அவசியம்

Share:

சுங்கை பட்டாணி, ஜூன்.28-

கிராமப்புற மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு அதிக அளவிலான ஒற்றுமை நிகழ்வுகள் எப்பொழுதும் செய்யப்பட வேண்டும் என்று சுங்கை பட்டாணி கம்போங் சுங்கை துக்காங்கின் கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பரமசிவன் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஜூன் 16 ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் கம்போங் சுங்கை துக்காங் கிராமப் புறத்தில் துப்புரவுப் பணிவுடன் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு சிறப்பாக அக்கிராமத்தின் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராமப்புற மக்களுக்கு அதிக அளவிலான மருத்துவ விழிப்புணர்வு வழங்குவதற்காகவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கிராமப் புறத்தின் நன்மையைப் பற்றி உணர்வுத்துவதற்காகவும் கிராமப்புற மேம்பாட்டுக் குழுவுடன் இணைந்து ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.

மேலும் , சுங்கை துக்காங் கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் ஒன்று கூடும் நிகழ்வினை மெர்போ மக்கள் நீதிக் கட்சியின் தொகுதித் தலைவரும் மலேசியக் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியுமான யுகின்ஸ் முத்துசாமி தொடக்கி வைத்தார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் கம்போங் சுங்கை துக்காங்கைச் சுற்றிலும் துப்புரவு பணிகளை மேற்கொண்ட பின், சோமசுந்தரம் தமிழ் மாணவர்களுக்காக வர்ணம் தீட்டும் போட்டிகளும் நடைபெற்றது. அத்துடன் பி40 குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்களையும் எடுத்து வழங்கினர்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி