சிக்,ஜன.23
கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் அக்காரில் பயணம் செய்த இரு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் நேற்று மாலை 6.45 மணியளவில் கெடா, சிக், கம்போங் லுபோக் துவாலாங் கில் நிகழ்ந்தது.
காரில் பயணித்துக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும், காரின் இயந்தித்தில் தீப்பிடித்துக் கொண்டதைப் போல வாடை வருவதை கண்டு, காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளனர். அப்போது கார் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் அந்த இரு பெண்களும் மின்னல் வேகத்தில் காரை விட்டு வெளியேறியதாக சிக் தீயணைப்பு நிலைய உதவி மேலாளர் சுல்கைரி மாட் தன்ஞில் தெரிவித்தார்.
காரில் கொழுந்து விட்ட எரிந்த தீயை வீரர்கள் சுமார் 20 நிமிடத்தில் கட்டுப்படுத்தினர். இச்சம்பவத்தில் அந்த இரு பெண்களும் காயம் அடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.








