Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் 4 மாவட்டங்களில் 11 இடங்களில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 33 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கெடாவில் 4 மாவட்டங்களில் 11 இடங்களில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 33 பேர் கைது

Share:

கெடா மாநில குடிநுழைவுத்துறை, நான்கு மாவட்டங்களில் உள்ள 11 வர்த்தக வளாகங்களில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 33 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையில், கெடா குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 18 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கோலா மூடா, கூலிம், குபாங் பாசு மற்றும் கோத்தா ஸ்டார் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓப்ஸ் பெலாஞ்சா, ஓப்ஸ் டாண்டான், ஓப்ஸ் கூத்திப் மற்றும் ஓப்ஸ் செலேரா எனும் நான்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 69 பேர் சோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 45 பேர் வெளிநாட்டினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 33 பேரில் 11 வங்கதேசத்தினர், 14 இந்தியர்கள், மூன்று இந்தோனேசியர்கள், இரு நேபாளிகள் மற்றும் மூன்று பாகிஸ்தானியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது, முறையான அனுமதியின்றி தங்கியிருந்தது மற்றும் காலாவதியான அனுமதியைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குடிநுழைவுச் சட்ட விதிமீறல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக சீக் மற்றும் பெலாந்திக் குடிநுழைவு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என கெடா குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

Related News