May 6, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பின் மிகப் பெரிய ஊழலை மூடி மறைத்த முன்னாள் சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி தண்டிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

நஜீப்பின் மிகப் பெரிய ஊழலை மூடி மறைத்த முன்னாள் சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி தண்டிக்கப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.29-

1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான ஊழல் விசாரணைகளை மூடி மறைத்து, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக்கைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க முயற்சித்த முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் அபாண்டி அலி தண்டிக்கப்பட வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் விவகாரங்களில் நஜீப் ரஸாக் எந்தத் தவறும் செய்யவில்லை என அபாண்டி அலி விடுவித்தது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய செயல் என சார்ல்ஸ் சந்தியாகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வழங்கிய வலுவான ஆதாரங்களை அபாண்டி அலி, வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும், விசாரணையை முடித்து வைத்தது மூலம் உண்மையை மறைக்க முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் 1எம்டிபி தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போதே, உள்நாட்டில் அந்தப் புகார்களை அபாண்டி அலி தள்ளுபடி செய்தது சந்தேகத்திற்குரியது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உண்மையை மறைக்க முயன்றதற்காகவும், ஒரு குற்றவாளியைக் காப்பாற்றப் பார்த்ததற்காகவும் தண்டனைச் சட்டம் 217 மற்றும் 218 ஆகிய பிரிவுகளின் கீழ் அபாண்டி அலி மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அவர் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.

நீதித்துறை உயர் பதவியில் இருந்த அபாண்டி அலி, தனது பதவிக்குத் துரோகம் விளைவித்து, ஊழலை மூடி மறைக்க உதவியது தேசத்திற்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் என்று ஜசெக.வைச் சேர்ந்த சார்ல்ஸ் சந்தியாகோ பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்