Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

Beranang இல் உள்ள காபுல் ஆறு இளஞ்சிவப்பு நிறமாக மாறிய மர்மம் என்ன?

Share:

ஜன.15-

உலு லங்காட், Beranangகில் உள்ள காபூல் ஆற்றின் நிறம் இளஞ்சிவப்பாக மாறியதற்கு காரணம் பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் என்று சுற்றுச்சூழல் துறை கண்டறிந்துள்ளது. சுமார் 300 மீட்டர் நீளமுள்ள மாசுபாடு ஆலையின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆலை முந்தைய இரவில் செயல்படவில்லை என்றும், திட்டமிடப்படாத கழிவுநீர் வெளியேற்றமே இந்த மாசுபாட்டிற்கு காரணம் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் Nor Aziah Jaafar தெரிவித்தார்.

மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி