Apr 29, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி யின் முன்னாள் உதவியாளர் ஜேம்ஸ் சாய், புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில், இன்று இரண்டாவது கட்ட விசாரணைக்காக ஆஜரானார்.

காலை 9.45 மணியளவில் அவர் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நுண்சில்கள் தயாரிப்பு நிறுவனமான ஆம் ஹோல்டிங்ஸ் உடன் கையெழுத்தான 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றது.

முன்னதாக நேற்று, இங்கிலாந்திலிருந்து மலேசியா திரும்பிய ஜேம்ஸ் சாய், சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News

மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு

அலிஃப் சுக்ரிக்கு எதிரான அவதூறு வழக்கில்  அப்துல் காதிர் -க்கு சாதகமாகத் தீர்ப்பு

அலிஃப் சுக்ரிக்கு எதிரான அவதூறு வழக்கில் அப்துல் காதிர் -க்கு சாதகமாகத் தீர்ப்பு

தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்

நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு

நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு

பெர்லிஸில் தலையில் ஏற்பட்ட காயத்தால் 8 மாதக் குழந்தை மரணம்: பராமரிப்பாளர் கைது

பெர்லிஸில் தலையில் ஏற்பட்ட காயத்தால் 8 மாதக் குழந்தை மரணம்: பராமரிப்பாளர் கைது

ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்

ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்