Mar 15, 2026
Thisaigal NewsYouTube
வர்த்தகத்துறையிலே நீடித்து இருந்திருந்தால் எனது சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடி வெள்ளியாகும் Tun Daim Zainuddin  கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

வர்த்தகத்துறையிலே நீடித்து இருந்திருந்தால் எனது சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடி வெள்ளியாகும் Tun Daim Zainuddin கூறுகிறார்

Share:

அரசியலில் நுழைவதற்கு முன்பே தாம் ஒரு வெற்றி பெற்ற வர்த்தகர் என்றும் கோடிக்கணக்கான வெள்ளி சொத்துக்களை கொண்டு இருந்ததாகவும் முன்னாள் நிதி அமைச்சர் Tun Daim Zainuddin தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடாமல் வர்த்தகத்துறையிலேயே நீடித்திருந்திருந்தால் எனது சொத்துக்களின் பங்குரிமை மட்டும் 5 ஆயிரம் கோடி வெள்ளிக்கும் அதிகமாக இருந்து இருக்கும் என்று தமக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்டு வரும் விசாரணையில் தமது சொத்து விவரங்களை ஆதரிக்கும் வகையில் வழங்கிய சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் 86 வயதான Tun Daim Zainuddin மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தமது வர்த்தக சகாவுடன் இணைந்து 1969 ஆம் ஆண்டிலேயே நில வர்த்தக மேம்பாட்டில் ஈடுபட்டதாகவும் தமது நிறுவனத்தின் பெயர் Syarikat Maluri Sdn.

Bhd. என்றும் துன் டாயிம் குறிப்பிட்டார்.இன்று கோலாலம்பூர் மையப்பகுதியில் 2,600 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ள Taman Maluri, Taman Bukit Maluri போன்றவை தமது நிறுவனத்தால் தோற்றுவிக்கப்பட்டதாகும் என்று துன் டாயிம் குறிப்பிட்டார்.Malaysian French Bank, UMBC போன்றவை தமக்கு சொந்தமான வங்கிகளாகும் என்றும் துன் டாயிம் குறிப்பிட்டார்.தவிர SimeUEP, SIME DARBY, Guthrie, TV3, MayBank, Conspland, Nestle Malaysia உட்பட பல நிறுவனங்கள் தம்முடைய ஆதிக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் இருந்ததாக துன் டாயிம் தெரிவித்துள்ளார்.Nestle Malaysia – வில் 10 விழுக்காடு பங்குரிமையை தாம் கொண்டுள்ளதாகவும், அந்த பத்து விழுக்காடு பங்குரிமையின் தற்போதைய மதிப்பு 300 கோடி வெள்ளியாகும் என்று துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரான துன் டாயிம் தமது அப்பிடெவிட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்