பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 04-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 259 யாத்ரீகாகளுடன் Jeddah [ஜெட்டா]விற்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ்சுக்கு சொந்தமான MH156 விமானம் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக கோலாலம்பூருக்கே திரும்பியது.
சவூதி அரேயியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான ஜெட்டா-விற்கு மலேசிய விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது.
அந்த விமானம் , மலாக்கா , நீரினையில் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது , திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் தொடர்பு கொண்ட விமானி ,அந்த யாத்ரிகர் பயணம் செஇத விமானத்தை கோலாலம்பூருக்கெ திரும்ப முடிவு செய்தார்.
விமானத்தின் எரிபொருளை தீர்ப்பதற்கு ஓரிரு சுற்றுகளை மேற்கொண்ட விமானி,அந்த விமானத்தை மாலை 5.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
கோலாலம்பூருக்கு திரும்புவதற்கு அந்த விமானம் மேற்கொண்ட சுமார் இரண்டு மணி நேரம் பயணத்தின் போது விமானம் திடிர் என்று இரண்டு மூன்று முறை கீழ் நோக்கி தள்ளப்பட்டதாக பயணிகள் கூறினர்.








