Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் தொழிற்சாலையில் போலி அடையாள அட்டையில் பணியாற்றி வந்த 31 சிறார்கள் கைது ஜோகூர் தொழிற்சாலையில் போலி அடையாள அட்டையில் பணியாற்றி வந்த 31 சிறார்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தொழிற்சாலையில் போலி அடையாள அட்டையில் பணியாற்றி வந்த 31 சிறார்கள் கைது ஜோகூர் தொழிற்சாலையில் போலி அடையாள அட்டையில் பணியாற்றி வந்த 31 சிறார்கள் கைது

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.18-

ஜோகூர், செனாயில், போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், பணியாற்றி வந்த 31 சிறார்கள் போலீசாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை 18 வயது நிரம்பியவர்களாகக் காட்டிக் கொள்ள, மொத்தம் 16 சிறுவர்களும், 15 சிறுமிகளும், தங்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளதாக புத்ரா ஜெயா தேசியப் பதிவிலாகாவின் விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் முகமட் கைரு ஃபர்ஹான் முகமட் சாஅட் தெரிவித்தார்.

அவர்களில் சிலர், 12 வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் என்றும், மேலும் சிலரோ பள்ளிக்குச் சென்று கொண்டே பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளனர் என்றும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஃபர்ஹான் குறிப்பிட்டார்.

மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 31 சிறார்களும் 18 வயதிற்குட்பவர்கள் என்று குறிப்பிட்ட ஃபர்ஹான், அவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவராக 14 வயது சிறுவனும் இருப்பதாகத் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்