May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இளைஞர்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது

Share:

ஜன.15-

"magic mushroom" என அழைக்கப்படும் மின்-சிகரெட் திரவத்தில் காணப்படும் போதைப்பொருள் செயற்கை கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனமான AADK கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டில், இந்த போதைப்பொருளை பயன்படுத்துவதாகக் கூறிய 50 மாதிரிகளை சோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது எனக் குறிப்பிட்டார் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh. இளைஞர்களிடையே இந்தப் போதைப்பொருள் பிரபலமாக இருப்பதற்கு " magic mushroom " என்ற பரவலான பயன்பாடே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் இது கஞ்சா அல்ல, மாறாக திரவ வடிவில் வேப்பில் பயன்படுத்தப்படும் செயற்கை கஞ்சா என ஆய்வுகள் கூறுகின்றன என்றார்.

செயற்கை போதைப்பொருட்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதில் AADK-க்கு சவாலாகவும் உள்ளது. இளைஞர்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மேலும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் AADK-க்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் Ruslin Jusoh கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்