Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இனவெறியையும், மதவெறியையும் கைவிட்டால் தான் மலேசியா பொருளாதாரத்தில் உயரும் - அன்வார் எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

இனவெறியையும், மதவெறியையும் கைவிட்டால் தான் மலேசியா பொருளாதாரத்தில் உயரும் - அன்வார் எச்சரிக்கை!

Share:

பட்டர்வொர்த், செப்டம்பர்.17-

மலேசியா தொடர்ந்து இறையாண்மையோடும், சுதந்திர தேசமாகவும் இருக்க வேண்டுமென்றால், மலேசியர்கள் இனத் தீவிரவாதம் மற்றும் மத வெறி கொண்ட மனப்பான்மையைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பினாங்கு, பட்டர்வொர்த் PICCA அரங்கில் நேற்றிரவு ஆயிரக்கணக்கான மலேசியர்கள் முன்னிலையில் மலேசிய தின உரையாற்றிய அன்வார், மத மற்றும் இன வெறி இரண்டும் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எச்சரித்தார்.

அதே வேளையில், சுதந்திரம் என்பது நிலையான பொருளாதார வளர்ச்சியையும், கலாச்சார அமைப்பையும் உறுதிச் செய்து, நம்மிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது ஆகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவின் சுதந்திரம் என்பது மிகவும் தனித்துவமானது, ஏனென்றால் அது மற்ற இனங்களின் மீதான அடக்குமுறையில் உருவாக்கப்பட்டதல்ல என்று குறிப்பிட்ட அன்வார், மற்ற இனங்களுடன் வளங்களையும், நீதியையும் பகிர்ந்து கொள்ளும் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து