May 16, 2026
Thisaigal NewsYouTube
இனவெறியையும், மதவெறியையும் கைவிட்டால் தான் மலேசியா பொருளாதாரத்தில் உயரும் - அன்வார் எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

இனவெறியையும், மதவெறியையும் கைவிட்டால் தான் மலேசியா பொருளாதாரத்தில் உயரும் - அன்வார் எச்சரிக்கை!

Share:

பட்டர்வொர்த், செப்டம்பர்.17-

மலேசியா தொடர்ந்து இறையாண்மையோடும், சுதந்திர தேசமாகவும் இருக்க வேண்டுமென்றால், மலேசியர்கள் இனத் தீவிரவாதம் மற்றும் மத வெறி கொண்ட மனப்பான்மையைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பினாங்கு, பட்டர்வொர்த் PICCA அரங்கில் நேற்றிரவு ஆயிரக்கணக்கான மலேசியர்கள் முன்னிலையில் மலேசிய தின உரையாற்றிய அன்வார், மத மற்றும் இன வெறி இரண்டும் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எச்சரித்தார்.

அதே வேளையில், சுதந்திரம் என்பது நிலையான பொருளாதார வளர்ச்சியையும், கலாச்சார அமைப்பையும் உறுதிச் செய்து, நம்மிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது ஆகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவின் சுதந்திரம் என்பது மிகவும் தனித்துவமானது, ஏனென்றால் அது மற்ற இனங்களின் மீதான அடக்குமுறையில் உருவாக்கப்பட்டதல்ல என்று குறிப்பிட்ட அன்வார், மற்ற இனங்களுடன் வளங்களையும், நீதியையும் பகிர்ந்து கொள்ளும் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து