லுமூட், டிச. 12-
பேரா, லுமூட், பந்தாய் தெலுக் பாத்தேக் கடற்கரையில் முதலை நடமாட்டம் இருப்பதால் அந்த கடற்கரைக்கு சுற்றுலா செல்கின்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த அழகிய கடற்கரையில் முதலை ஒன்றின் நடமாட்டம்ட இருப்பது இன்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொது தற்காப்புப்படை தெரிவித்துள்ளது.
எனவே விடுமுறை நாட்களில் அந்த கடற்கரைக்கு செல்கின்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.








