Mar 22, 2026
Thisaigal NewsYouTube
169 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்ட எஸ்பிஆர்எம்  நடவடிக்கையை இஸ்மாயில் சப்ரி எதிர்க்கவில்லை
தற்போதைய செய்திகள்

169 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்ட எஸ்பிஆர்எம் நடவடிக்கையை இஸ்மாயில் சப்ரி எதிர்க்கவில்லை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

ஒரு வீட்டிலிருந்து 169 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கையை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும், அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முகமட் அனுவார் முகமட் யூனோஸும் எதிர்க்கவில்லை என்று இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரியின் வீட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் குறித்து இஸ்மாயில் சப்ரியிடம் பல முறை எஸ்பிஆர்எம் விசாரணை நடத்தியுள்ளது.

அந்த ரொக்கப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஆகியோர் உரிமைக் கொண்டாடுவதிலிருந்து தடுக்க எஸ்பிஆர்எம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் அந்தப் பணத்தை கோருவதற்கோ அல்லது எஸ்பிஆர்எம் நடவடிக்கையைத் தடுக்கவோ அவ்விருவரும் மேல் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்று நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் எஸ்பிஆர்எம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் மஹாடி அப்துல் ஜுமாஆட் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து