Jun 16, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு
தற்போதைய செய்திகள்

கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு

Share:

தாம் போட்டியிட்ட செகாமாட் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கும் மூவார் தேர்தல் நீதிமன்ற முடிவை எதிர்த்து, பிரபல தொழில் அதிபரும், ம.இ.கா. வின் தேசிய பொருளாருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இத்தேர்தலில் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள பிகெஆர் வேட்பாளர் ஆர்.யுவனேஸ்வரனின் வெற்றியை ரத்து செய்யக் கோரி, ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
வாக்காளர்களுக்கு விருந்து உபசரிப்பு நடத்தி, வாக்கு வேட்டை நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை யுவனேஸ்வரன் மீறியுள்ளதாகவும் ராமசாமி தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் வழக்கு மனுவை விசாரணை செய்த மூவார் நீதிமன்றம், செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அம்முடிவை எதிர்த்து ராமசாமி மேல் முறையீடு செய்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்