தாம் போட்டியிட்ட செகாமாட் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கும் மூவார் தேர்தல் நீதிமன்ற முடிவை எதிர்த்து, பிரபல தொழில் அதிபரும், ம.இ.கா. வின் தேசிய பொருளாருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இத்தேர்தலில் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள பிகெஆர் வேட்பாளர் ஆர்.யுவனேஸ்வரனின் வெற்றியை ரத்து செய்யக் கோரி, ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
வாக்காளர்களுக்கு விருந்து உபசரிப்பு நடத்தி, வாக்கு வேட்டை நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை யுவனேஸ்வரன் மீறியுள்ளதாகவும் ராமசாமி தமது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் வழக்கு மனுவை விசாரணை செய்த மூவார் நீதிமன்றம், செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அம்முடிவை எதிர்த்து ராமசாமி மேல் முறையீடு செய்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


