Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பெண் குழந்தையின் உடல் Queensbay கடலில் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பெண் குழந்தையின் உடல் Queensbay கடலில் மீட்கப்பட்டது

Share:

பினாங்கு, பாயான் பாரு, Queensbay கடற்கரையில் நேற்று மாலையில் பெண் குழந்தை ஒன்றின் உடல் கரை ஒதுங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாலை 5:55 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு போ​லீசார் விரைந்ததாக பினாங்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கமாருல் ரிசால் ஜெனால் கூறினார்.

அப்பெண் குழந்தையின் உடல் வேறொரு இடத்திலிருந்து கடல் அலையினால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும், குழந்தையின் உடலில் ஆடை ஏதுமில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி கமாருல் ரிசால் அறிவித்தார்.

மருத்துவ பரிசோதனைக்காக குழந்தையின் உடல், பினாங்கு மரு​த்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 318 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏசிபி கமாருல் ரிசால் தெரிவித்தார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு