Feb 8, 2026
Thisaigal NewsYouTube
திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது
தற்போதைய செய்திகள்

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் பகுதியில் காரின் பின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரின் இடது கை முறிந்தது. காரின் பின் இருக்கையில் ஓர் உறவினரால் மடியில் அமர வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது சிறுமி, எதிர்பாராத விதமாக கதவைத் திறந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.

அந்தச் சமயம் சம்பந்தப்பட்ட பாதையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் திடீரெனத் திறக்கப்பட்ட கதவைத் தவிர்க்க முடியாமல் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. கார்களில் உள்ள Child Lock பயன்படுத்தப்படாததால் அந்தச் சிறுமியால் கதவைத் திறக்க முடிந்ததாக முஹமட் ஸம்ஸுரி தெரிவித்தார். இந்த விபத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு மோட்டார் சைக்கிளும் நான்கு கார்களும் சேதமடைந்த நிலையில், காவற்படையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை

செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை