Apr 14, 2026
Thisaigal NewsYouTube
திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது
தற்போதைய செய்திகள்

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் பகுதியில் காரின் பின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரின் இடது கை முறிந்தது. காரின் பின் இருக்கையில் ஓர் உறவினரால் மடியில் அமர வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது சிறுமி, எதிர்பாராத விதமாக கதவைத் திறந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.

அந்தச் சமயம் சம்பந்தப்பட்ட பாதையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் திடீரெனத் திறக்கப்பட்ட கதவைத் தவிர்க்க முடியாமல் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. கார்களில் உள்ள Child Lock பயன்படுத்தப்படாததால் அந்தச் சிறுமியால் கதவைத் திறக்க முடிந்ததாக முஹமட் ஸம்ஸுரி தெரிவித்தார். இந்த விபத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு மோட்டார் சைக்கிளும் நான்கு கார்களும் சேதமடைந்த நிலையில், காவற்படையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க  தலைமைச் செயலாளர் அறிவிப்பு

நாளை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி: அரசாங்க தலைமைச் செயலாளர் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் 400 குறைந்த கார்பன் திட்டங்கள் நிறைவடையும்: அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

வீட்டில் தனியாக வசித்த 69 வயது மூதாட்டி உயிரிழப்பு; 4 நாட்களுக்குப் பின் உடல் மீட்பு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் - இரண்டு பெண்கள் மீதும் குற்றச்சாட்டு

14 ஆவது பொதுத் தேர்தல்  தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில்  அமார் சிங் சாட்சியம்

14 ஆவது பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நஜிப் வீட்டிலிருந்து பைகள், பெட்டிகள் மாற்றம்: நீதிமன்றத்தில் அமார் சிங் சாட்சியம்

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோத்தா கெமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பூஜை: 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு