சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், ஒரு குழுவாக இருக்கும் சிறுவர்கள் தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு நாயை மிக மோசமான முறையில் கையாண்டு 'பாலியல் சுரண்டல்' செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறுவர்கள் அந்த வாயில்லா ஜீவனை ஒரு விளையாட்டுப் பொருளாகக் கருதி துன்புறுத்துவதுடன், அதனை வீடியோ எடுத்து பொழுதுபோக்கு ரசனைக்காக செயல்பட்டுள்ளனர்.
விலங்குகள் உணர்ச்சிகளற்ற பொருட்கள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இணையவாசிகள், இத்தகைய வன்முறைச் செயல்களை ஒருபோதும் நகைச்சுவையாகக் கருத முடியாது என கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டுமே தவிர, அவற்றைப் 'பாலியல் சுரண்டல்' செய்யக்கூடாது என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








