கோலாலம்பூர், மார்ச்.08-
தித்திவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஜோஹாரி அப்துல் கானி, கம்போங் பாரு மஸ்ஜிட் ஜாமெக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரத்து 800 குடியிருப்பாளர்களுக்கு நோன்புப் பெருநாள் நிதியுதவியையும் உணவுப் பொருட்களையும் வழங்கினார். எதிர்வரும் ஷவ்வால் முதல் தேதி கொண்டாட்டங்களை முன்னிட்டு, அந்தத் தொகுதி முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு இத்தகைய உதவிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது பெருநாள் பலகாரங்கள், புத்தாடைகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவுவதாகப் பயனடைந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.








