நாட்டின் எரிசக்தி மாற்ற முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான விரிவான உத்திகள் மற்றும் உயர் தாக்க முயற்சிகளை கோடிட்டுக் காட்டும் NETR எனப்படும் தேசிய ஆற்றல் மாற்றத்தின் இலக்கு மற்றும் HETR எனப்படும் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார இலக்கு ஆகியவை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்க உள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
12வது மலேசியத் திட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டு முதல் 2040 ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய எரிசக்திக் கொள்கை ஆகியவற்றில் உள்ள தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பின் இலக்கை அடைவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் எதிர்காலத்தில் ஆற்றல் துறைக்கான முன்னோக்கி செல்லும் வழியை மூலோபாய ரீதியாக வரைபடமாக்கும் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டில் முக்கிய ஊக்கியாக அத்துறையை நிலைநிறுத்துவதோடு, 2040 ஆம் ஆண்டில் குறைந்த கார்பல் என்ற திட்டத்திற்கு பெரும் உதவியாகத் திகழும் என்று பிரதமர் அன்வார் விளக்கமளித்துள்ளார்.
இந்தக் கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த, நாட்டிற்கு முக்கியமான சமூக பொருளாதார முன்னேற்றத்தின் முழுப் பயனையும் அடைவதற்கு, அரசாங்கம் பல திட்டங்களை உருவாக்கி வருகிறது என்றும், அதில் மிக முக்கியமானது NETR என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


