May 27, 2026
Thisaigal NewsYouTube
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

Share:

அஸ்தானா, டிச. 26-


கஸக்ஸ்தானில் அக்தாவ் அனைத்துலக விமான நிலையத்தின் அருகில் அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதற்கு அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று ஆருடம் கூறப்பட்டு வருகிறது.

எம்பரர் 190 ரகத்திலான அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகத்தில் துவாரம் ஒன்று காணப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளன என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேற்காசிய நாடான முன்னாள் சோவியத் குடியரசின் கஸக்ஸ்தானில் நேற்று புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 67 பேரில் 38 பேர் மாண்டனர்.

ரஷ்யாவின் குரோன்ஸி நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் திசைமாறிக் கஸக்ஸ்தானில் விபத்துக்குள்ளானது.

விமானம் வழக்கமான பாதையை விட்டு ஏன் வெகுதூரம் சென்றது என்பதைப் புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.

மோசமான வானிலையால் விமானம் திசை மாறியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததாக அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியெவ் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு