May 28, 2026
Thisaigal NewsYouTube
கோல நெராங்கில் வெள்ளம்: 10 பேர் பத்திரமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கோல நெராங்கில் வெள்ளம்: 10 பேர் பத்திரமாக மீட்பு

Share:

கோல நெராங், ஏப்ரல்.06-

கெடா மாநிலத்தின் கோல நெராங் அருகே உள்ள கம்போங் பொகொக் மாச்சாங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில், அதில் சிக்கிய 3 குழந்தைகள் பத்து பேர் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோல நெராங் தீயணைப்பு - மீட்பு நிலையத்தின் தலைவர், அமினுடின் மாட் கோஸாலி கூறுகையில், இன்று அதிகாலை 2.24 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாக செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்ததும், கனமழை காரணமாக திடீர் வெள்ளத்தில் 10 பேர் சிக்கித் தவித்தது தெரியவந்தது. அவர்களில் ஆறு பேர் பெண்கள், மூன்று சிறுவர்கள், ஓர் ஆண் குழந்தை ஆவர். வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை காலை 4.31 மணிக்கு முடிவடைந்தது என்று அமினுடின் கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்