Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒப்பந்த, தள தொழிலாளர்கள் நலன் குறித்து மலேசியா – இந்தியா இடையில் இரு தரப்பு பேச்சு வார்த்தை
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த, தள தொழிலாளர்கள் நலன் குறித்து மலேசியா – இந்தியா இடையில் இரு தரப்பு பேச்சு வார்த்தை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.08-

இந்தியாவிலிருந்து வரும் ஒப்பந்தம் மற்றும் தள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, வட்டார அளவில், ஒரே மாதிரியான தரநிலைகளை அமைப்பது குறித்து, மலேசியா – இந்தியா இடையில் இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற உலக சமூகப் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங், இந்தியாவின் தொழிலாளர், வேலை வாய்ப்பு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா உடன் இது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையில், இந்தியத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அதே வேளையில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆசியான் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மலேசியாவும் இந்தியாவும் வலியுறுத்தின.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி