Apr 1, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண நிதியைத் தொடங்கியது ஜசெக
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண நிதியைத் தொடங்கியது ஜசெக

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதற்கு, பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜசெக நிவாரண நிதி ஒன்றை தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பும் மக்களின் நிதி உதவி, சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைவதை உறுதிச் செய்வதற்கு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிவாரண நிதித் திட்டத்தை ஜசெக முன்னெடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தைக் குறை கூறும் நபர்கள், அறிவிலிகள் என்று அந்தோணி லோக் வர்ணித்தார்.

இந்த தீச் சம்பவம் ஒரு பேரிடராகும். இதில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ விரும்ப வருகின்றவர்களை சிலர் குறை கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமும், தனியார் துறையும் எவ்வாறு பொறுப்பேற்றுள்ளதோ அதைப் போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று ஜசெக ஆதரவார்கள் தம்மை வினவி வருவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

எனவே டிஏபி தலைமையில் இந்த நிவாரண நிதி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக் விளக்கம் அளித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்