பகாங் மாநில அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு ஊக்குவிப்பித் தொகையாக குறைந்தது 2 ஆயிரம் வெள்ளி அல்லது ஒன்றரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது என அம்மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் அறிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான பகாங் மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கையை இன்று அம்மாநில சட்டமன்றத்தில் வாசிக்கும்போது, இந்த அறிவிப்பை அவர் செய்தார்.
இதற்காக மொத்தம் 39.6 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








