கோலாலம்பூர்,ஜன.10
மாமன்னருக்கு 50 கோடி வெள்ளி முதல் 100 கோடி வெள்ளி வரையில் தாம் லஞ்சம் கொடுத்ததாக கூறும் தரப்பினர், அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று கேட்டுக்கொண்டார்.
தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள துணிவில்லாத கோழைகள்தான் தமக்கு எதிராக இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்த முடியும் என்று துன் மகாதீர் வர்ணித்தார்.
அன்வார் இப்ராஹிமைப் போலவே மற்றவர்களும் தமக்கு எதிராக அவதூறான குற்றச்சசாட்டை கூறி வருகின்றனர் என்று மகாதீர் குறிப்பிட்டார். தம்மிடம் கோடிக்கணக்கான வெள்ளி பணம் இருப்பதாக அன்வார் கூறி வருகிறார். ஆனால், அதற்கான ஆதாரத்தை அவர் இன்று வரையில் நிரூபிக்கவில்லை என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.








