Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் பணியாளர்களை விசாரணை நடத்துவீர்
தற்போதைய செய்திகள்

தேர்தல் பணியாளர்களை விசாரணை நடத்துவீர்

Share:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மற்றவர்களின் மைக்காட் அட்டையைப் பயன்படுத்தி, வாக்களிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில் தனது தேர்தல் அதிகாரிகளை மலேசிய தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் விசாரணை செய்ய வேண்டும் என்று தேர்தல் நடைமுறை மீதான கண்காணிப்பு அமைப்பான பெர்சே கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு வாக்காளரும், வாக்களிப்பதற்கு முன்பு அவரின் மைக்காட் அட்டையை வாங்கி பரிசோதனை செய்வதுடன், வாக்களிக்கும் நபர், அந்த மைக்காட் அட்டைக்குரியவரா? என்பதை முகத்தைப் பார்த்து உறுதி செய்தப் பின்னரே வாக்குச்சீட்டை தேர்தல் அதிகாரிகள் வழங்குகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது, ஒருவர் மற்றவரின் அடையாளகார்டை பயன்படுத்தி வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.அப்படியிருந்தும் மற்றவர்களின் மைக்காட் அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கப்பட்டுள்ளது என்றால் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் ஏதோ குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இது குறித்து கடமையில் இருந்த தேர்தல் அதிகாரிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பெர்சே வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு