கோலாலம்பூர் மாநகரில் , புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள கேளிக்கை மையங்களில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு உபசரணைப் பெண்களாக பணியாற்றிய 84 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை 1.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் அந்த கேளிக்கை மையங்களின் நிர்வாகிகள், முகப்பிட பணியாளர், பணியாளர்கள் என உள்ளூரைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் 22 உபசரணைப்பணியாளர்கள், 46 தொழிலாளர்கள், 336 வாடிக்கையாளர்களிடம் போலீசார் சோதனை நடத்தியதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்தார். வாடிக்கையாளர்களில் அறுவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாக ஐ.ஜி.பி. குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


