Feb 28, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கில் பதற்றம்: விழிப்புடன் இருக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம்: விழிப்புடன் இருக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.28-

மத்திய கிழக்கில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கத்தாரில் வசிக்கும் மலேசியர்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் டோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கத்தார் அதிகாரிகள் மற்றும் மலேசியத் தூதரகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்கள் மூலம் மட்டுமே தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Related News