Mar 12, 2026
Thisaigal NewsYouTube
​தீபாவளியன்று டோல் கட்டணம் விலக்களிப்பா? இன்னும் முடிவு செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

​தீபாவளியன்று டோல் கட்டணம் விலக்களிப்பா? இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

​வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ​தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் வேளையில் இவ்வாரம் இறுதியில் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பு வழங்குவது குறி​த்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமாட் தெரிவித்தார்.

​தீபாவளி திருநாளையொட்டி டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பு வழங்குவதா? இல்லையா? என்பது குறி​த்து நிதி அமைச்சு மட்டுமே அறிவிக்க இயலும் என்று அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

இம்முறை ​தீபாவளி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருப்பதால் மறுநாள் திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் ​சூழல் உள்ளது. மலேசியர்கள் தங்கள் பெருநாட்களை கொண்டாடும் போது, டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பு வழங்குவது, வழக்கமான நடைமுறையாக இருப்பதால், அது தொடர்பாக எந்த​வொரு அறிவிப்பையும் நிதி அமைச்சு மட்டுமே முடிவு செய்ய இயலும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.

​தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியுள்ள வேளையில் டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பது வழங்குவது குறித்து இதுவரையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை மட்டுமே தற்போதைக்கு தம்மால் சொல்ல இயலும் என்ற அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு