கோலாலம்பூர்,ஜன.19
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை உட்படுத்திய SRC இண்டர்நேஷனலின் பண மோசடி வழக்கு செப்டம்பர் மாதம் 17 முதல் 19 ஆம் தேதியும், 23 முதல் 24 ஆம் தேதியும் செவிமெடுப்புக்கு வருவதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பணமோசடி குற்றச்சாட்டு கைவிடப்பட வேண்டும் என்ற நஜிப்பின் மனு குறித்து பிராசிகியூஷன் தரப்பு இன்னும் எந்த முடிவும் செய்ய வில்லை என துணைப் பப்ளிக் பிராசிகுயூட்டர் அஷ்ரோஃப் அட்ரின் கமாருல் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி கே முனியாண்டி இந்தத் தேதியை முடிவு செய்தார்.
பிராசிக்கியூஷன் தரப்பு அன்றைய நாளில் தயாராக இல்லை என்றால், நஜிப் தரப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்படவோ அல்லது முழு விடுதலைக்கோ விண்ணப்பிக்கலாம் என கே முனியாண்டி தெரிவித்தார்.








